ப்ரவாஹன்
தென் தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரைப் பற்றி ஒரு கதை உண்டு. அந்தக் கதை, "ஒரு ஊரிலே ஒரு நிலக்கிழார் இருந்தார். பெரிய செல்வந்தர். அவர் தனது நிலத்தில் வேலை செய்கின்றவர்களை சொல்லொணாக் கொடுமைகள் செய்து வந்தார். ஊர்ப் பிரமுகராகவும் இருந்ததால் ஊரில் உள்ளவர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி வந்óதார். வயது முதிர்ந்து மரணப் படுக்கைக்கு வந்துவிட்ட அவர் ஊரில் உள்ளவர்களையெல்லாம் அழைத்து நான் இவ்வளவு காலமாக உங்களுக்குப் பல கொடுமைகள் இழைத்திருக்கிறேன். இப்போது மரணப்படுக்கையில் இருக்கிறேன். நான் செய்த கொடுமைகளுக்கெல்லாம் கழுவாய் தேட விரும்புகிறேன். அதற்காக நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொண்டார். அந்த ஊர் மக்களும் மரணப்படுக்கையில் இருக்கிறாரே என்று அவர் மீது அனுதாபம் கொண்டு அவர் கேட்கின்ற உதவியைச் செய்வதாக வாக்கு கொடுத்தனர். அவர் கேட்ட உதவி இதுதான்.
நான் உங்களுக்கு இழைத்த கொடுமைகளுக்குப் பரிகாரமாக நான் இறந்தபின்னர் எனது உடலை பல கூறுகளாக வெட்டி பட்சிகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாக நீங்கள் போட்டுவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இறந்த உடலை அப்படிச் செய்வதில் தவறில்லை என்று நினைத்த ஊர் மக்களும் அப்படியே செய்வதாக வாக்கு கொடுத்தனர். ஓரிரு நாட்களில் அவர் இறந்தும் போனார். ஊர் மக்கள் எல்லாம் கூடி அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுகிற செயலில் இறங்கினர். அவர் இறந்துவிட்ட செய்தி ஊர் முழுவதும் பரவியது. அங்கிருக்கின்ற காவல் நிலையத்திற்கும் அந்தச் செய்தி போனது. உடனடியாக காவலர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக அவரது உடலைக் கூறுபோடத் தயாராகிக் கொண்டிருந்த அனைவரையும் கைது செய்து கொண்டு சென்றனர். எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்? எங்களுக்கு அவர் செய்த கொடுமைகளுக்குப் பரிகாரமாக இப்படிச் செய்யவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நாங்கள் அதைத்தான் செய்கிறோம் என்றனர். அதற்கு அந்தக் காவலர்கள், அஞ்சல் மூலம் தங்களுக்கு ஒரு புகார் வந்திருப்பதாகவும் அதில் அவர் இறந்த பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்ட ஊர்க்காரர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் அதனால் தான் இறந்ததும் தனது உடலைப் பாதுகாத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும், தனது உடலைக் கூறுபோடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரியிருந்ததை காவலர்கள் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புகாரையும் காண்பித்தார்கள். பிறகுதான் அவரின் கொடூர சூழ்ச்சியை, செத்தும் அவர் திருந்தவில்லை என்பதை அந்த ஊர் மக்கள் புரிந்து கொண்டனர்." கிசும்பு என்பது இதுதான்.
இதுபோன்ற கிசும்பைத்தான் கடந்த ஆனந்த விகடன் (29-11-06) இதழில் பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் செய்திருக்கிறார்.
வரலாற்று உணர்வின் தேவையை வலியுறுத்த முதற்கண் உண்மையான வரலாற்றைச் சொல்லவேண்டும். பூணூலையும், ஹிட்லரின் ஆரியப் பெருமை முழக்கத்தையும் முடிச்சுப்போட்டு, பார்ப்பனர் என்கிற சொல்லைத் தவிர்த்து, பார்ப்பனர்கள் மீது
வெள்ளாளர்கள் பரம்பரையாகக் கக்கி வருகின்ற விஷத்தை வழக்கம்போலக் கக்கியிருக்கிறார். பார்ப்பனர் என்று நேரடியாகச் சொல்லுவதற்கு பதிலாக மார்பில் நூல் அணிந்தவர்கள் என்றும் ஆரியர்கள் என்றும் சூசகமாகச் சொல்லியிருப்பதன் காரணம், ஒருவேளை ஆனந்த விகடன் குழும உரிமையாளர்கள், பார்ப்பனர் என்று எழுதினால் பிரசுரிக்க மாட்டார்களோ என்று அவர் ஐயம் கொண்டிருக்கலாம்.
இன்றைக்கு, சாதி நமது நாட்டில் நிலவும் கொடுந் தீங்கு என்பதில் நமக்கு ஒன்றும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் நமது நாட்டின் என்று மட்டும் இதைச் சொல்வது உண்மையான வரலாறு அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதிநிதிகளுக்கு ஆப்பிரிக்காவில் சாதிகள் இருக்கின்ற உண்மை தெரியும். இந்தியாவை விடக் கொடுமையான நிலையில் ஆப்பிரிக்காவில் சாதி முறை இருப்பதை விளக்கி காலச்சுவடு (செப்டம்பர் 2006) இதழில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது. அப்படியிருக்கையில் இந்தியாவில்தான் சாதிகள் இருக்கின்றன என்று சொல்லுவது முதல் வலாற்றுத் திரிபு.
குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது பேரழிவுச் சூழலில் அழிவின் விளிம்பில் நின்றபோதிலும் ஆதிக்கச் சாதியினர்
செய்த அவமானகரமும் துயரமுமான சம்பவத்தைப் பற்றிச் சொல்லும்போது நம் "உயர் சாதி சகோதரர்கள்" என்று அன்பாக வருத்தப்பட்டிருக்கிறார். இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயம், கட்டுரையின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பின் மூலம் பார்ப்பனர்கள்தான் அப்படிச் செய்தனர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், எங்களுக்கும் ஓரே உலையில் உணவு சமைத்தால் நாங்கள் சாப்பிடமாட்டோம் என்று பெரிய போராட்டத்தை நடத்தியவர்களில் பெரும்பாலும் பார்ப்பனர்கள் அல்ல, பார்ப்பனர் தவிர்த்த முற்பட்ட சாதிப்பிரிவுகளையும் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் சேர்ந்தவர்கள். குஜராத் மாநிலத்திற்கு 13 நபர்கள் கொண்ட ஒரு குழுவை அழைத்துச்சென்று 10 நாட்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவன் என்கிற முறையில் நேரிடையாக அறிவேன். இது இரண்டாவது வரலாற்றுத் திரிபு.
‘உழந்தும் உழவே தலை' என்று சொல்லுகின்ற திருக்குறள்தான் தமிழ் மரபு என்று சொல்கிறார் பேரா. ஆ.சி. ஆனால், திருக்குறளுக்கும் முற்பட்ட வரலாறு தமிழர்களுக்கு உண்டு. புறநானூறு அகநானூறு போன்ற இலக்கியங்களும், தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இலக்கணமான தொல்காப்பியம் என்ற ஒன்றும் உண்டு. “பாணன், பறையன், துடியன் கடம்பன் இந்நான்கல்லது குடியுமிலவே" என்று சொல்லுவது புறநானூறு. எழுத்து, சொல், பொருள் என்று பிரித்து தமிழ் மொழியையும், அகத்திணை, புறத்திணை என்று பிரித்து தமிழ்ச் சமூகத்தையும் இலக்கணப்படுத்திய தொல்காப்பியம்தான் தமிழரின் தொன்மையான இலக்கணம். இது வரலாறு. தொல்காப்பியம் சொல்லுகின்ற தமிழ்ச் சமூக இலக்கணம்:
“நூலே, கரகம், முக்கோல், மணையே,
ஆயுங் காலை, அந்தணர்க் குரிய.
படையும், கொடியும், குடையும், முரசும்,
தாரும், முடியும், நேர்வன பிறவும்,
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய.
அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே.
பரிசில், பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர்,
நெடுந்தகை, செம்மல், என்று இவை பிறவும்,
பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே.
ஊரும், பெயரும், உடைத்தொழிற் கருவியும்,
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே.
தலைமைக் குணச் சொலும் தம்தமக்கு உரிய
நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப.
இடை இரு வகையோர் அல்லது, நாடின்,
படை வகை பெறாஅர் என்மனார் புலவர்.
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.
மெய் தெரி வகையின் எண் வகை உணவின்
செய்தியும் வரையார், அப் பாலான.
கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே.
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது,
இல் என மொழிப - பிறவகை நிகழ்ச்சி.
வேந்து விடு தொழிலின் படையும் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப - அவர் பெறும் பொருளே.
அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே.
வில்லும், வேலும், சுழலும், கண்ணியும்,
தாரும், மாலையும், தேரும், மாவும்,
மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய.
அன்னர் ஆயினும், இழிந்தோர்க்கு இல்லை." (தொல்காப்பியம், பொருள் அதிகாரம், மரபு இயல் 71-85)
"மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
ஐயர் யாத்தனர் கரணம் என்ப." (தொல்காப்பியம், பொருள் அதிகாரம், கற்பு இயல் 3-4)
தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இதுதான் உண்மையான இலக்கணம், தமிழ் மரபு என்பதை தமிழ் அறிஞர்கள் அறிவார்கள். பேரா. ஆ.சி. சொல்லுகின்ற திருக்குறள், தொல்காப்பியத்திற்குப் பின்னர் எழுதப்பட்டது. "உழந்தும் உழவே தலை" என்று சொல்லுகின்ற திருக்குறள், தொல்காப்பியம் கூறியிருப்பதை மறுத்திடவில்லை. இதற்கு உதாரணம், "மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்" என்கிற குறள். இதன் பொருள் பிறப்பொழுக்கமே முதன்மையானது அதாவது நற்குடியில், நல்ல சாதியில் பிறக்க வேண்டும் என்பதாம். அதே திருக்குறள்தான் "நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்" என்றும் "நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின் கண் ஐயப்படும்" என்றும் சாதிக்கேற்ற புத்தி என்பதைச் சொல்லும். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்று செய்யும் தொழிலை இழிந்தது என்றும் சிறந்தது என்றும் இலக்கணம் வகுத்தது. இந்தத் தமிழ் வரலாற்றை மறைத்தும் திரித்தும் விட விரும்புவது பேரா.
ஆ.சி. போன்றவர்கள் மரபாக செய்து வந்திருப்பதுதான்.
அதே திருக்குறள், "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்" என்று சொல்கிறது. இந்தியாவின் தீமைகள் அனைத்திற்கும் காரணம் பார்ப்பனர்களே என்று சொல்லுகின்றவர்கள் இதற்கு என்ன பொருள் சொல்வார்களோ நானறியேன். ஆனால் அரசன்தான் அனைத்துக்குமான அதிகாரம் படைத்தவன் என்பதைத்தான் இந்தக் குறள் தெற்றெனச் சொல்கின்றது. ஒருவேளை பேரா. ஆ.சி. இதைச் சொல்லவிரும்பாததற்கு வலுவான காரணம் இருக்கலாம். அது,
தங்களை நிலவுடைமையாளர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், தாங்கள் சேர சோழ பாண்டிய மூவேந்தர்களுக்கு மகற்கொடை -பெண்ணை தானமாகக்-